இடர்பாடுகள் நிறைந்த இன்றைய தாயகஅரசியல் களத்தில் நாவடக்கம் பிரதானமானது. தமிழர்கள் ஆயுதமேந்தியது இன்னுமோர் இனத்தின்மீது மேலாதிக்கத்தை செலுத்துவதற்காக அல்ல எங்களது தமிழினம் கொல்லப்படுவதில் இருந்து தமை பாதுகாத்துக்கொள்வதற்காகவே ஆயுதமேந்தினோம். அந்தவகையில் உயிரையும் உதிரத்தையும் கொடுத்து தமிழ்த்தேசியத்தை உருவாக்கி அதன் காவலர்களாக கவசங்களாக காத்துநின்றவர்கள் போராளிகள்தான்.
நாம்உருவாக்கிய தேசியத்தில் பதவிகள் தருகின்ற இதமானசூடுகளை அனுபவித்து ஆள்கின்றவர்கள், விடுதலைக்கனவுடன் ஆயுதமேந்தியோரை மலினப்படுத்தும்விதமாக ஆயுததாரிகள் என விளித்துநிற்பது அறத்திற்கு அப்பால்பட்டது.
ஒவ்வொருதேர்தல்காலத்திலும் நீங்கள் அடிக்கின்ற அரசியல் அலப்பறைகள் எமக்கும் எமதுமக்களுக்கும் புதியவையல்ல அவற்றினை நாம் கசப்புணர்வோடே அவதானிக்கின்றோம் .
விரைந்துமாறுகின்ற அரசியல்களம் நிலைத்து நீட்சிபெறுவதற்கு இதுபோன்ற சொல்லாடல்கள் என்றுமே பலம்சேர்க்கபோவதில்லை. யாராகினும் நா காக்க வேண்டுகிறோம்.
இவ்வாறான சொல்லாடல்களை பயன்படுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்புப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் இந்தமண்ணிற்காய் ஆயுதமேந்தி மரணித்த வீரர்களை பெற்றெடுத்தவர்களிடமும் போராளிகளிடமும் பகிரங்கபொதுமண்ணிப்பினை கோரவேண்டுமன்பதே எமது நிலைப்பாடாகும்.
க.துளசி
ஊடகப்பிரிவு
ஜனநாயக போராளிகள் கட்சி