Sunday , August 24 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 4 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 4 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள இராணுவ முகாமை குறிவைத்து இன்று தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது.

இதில் மூன்று தலிபான்கள் உட்பட இராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.ஐந்து இராணுவ வீரர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இராணுவ முகாமிற்குள் நுழைய நினைத்த மூன்று தலிபான்களை கண்டறிந்த ஒரு இராணுவ வீரர் அதில் ஒரு தலிபான் தீவிரவாதியை சுட்டுள்ளார்.

ஆனால் மீதமிருந்த இரண்டு தீவிரவாதிகள் தற்கொலை வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …