பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீது திறந்த முறையில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (புதன்கிழமை) முற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலத்திரனியல் வாக்கெடுப்பு முறையால் அண்மையில் நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பநிலையைக் கருத்திற்கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
55 உறுப்பினர்களுடைய கையெழுத்துக்களுடன் பிரதமர் ரணிலுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினர் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை சமர்ப்பித்துள்ளனர். குறித்த பிரேரணை மீது, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி விவாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.