போதைப்பொருள் மையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளதாக முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றஞ் சுமத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
அன்று தேயிலை கைத்தொழில் துறையில் உலகப் பிரசித்தி பெற்றிருந்த இலங்கை இன்று போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக உலகப் பிரசித்தி பெற்றுக்கொண்டுள்ளது. தற்பொழுது இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதைப்பொருள் விநியோகம் செய்யும் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளது.
சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறிகளிலும் போதைப்பொருள் விநியோகம் செய்யப்படுகின்றது. கொள்கலன்களில், லொறிகளில் போதைப்பொருட்கள் மீட்கப்படுகின் றன. பிடிக்கப்படும் போதைப்பொருள்களுக்கு என்ன நேர்கின்றது என்பது தெரியவில்லை.
எனினும், போதைப்பொருள்களை இல்லாதொழிக்கவும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் அரசுக்கு எவ்வித திட்டங்களும் கிடையாது – –என்றார்.