Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வடக்கு முதலமைச்சரின் விசேட அறிவிப்பு

வடக்கு முதலமைச்சரின் விசேட அறிவிப்பு

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கான முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நாளை மறுதினம் வடக்கு கிழக்கில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை வடமாகாண சபை ஒழுங்கு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், வடமாகாண முதலமைச்சர் இன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஒழுங்குகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து முள்ளிவாய்க்கால் செல்வதற்கு விசேட போக்குவத்து ஒழுங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

போக்குவரத்து ஒழுங்குகள் குறித்து வடமாகாண முதலமைச்சர் இந்த விசேட அறிக்கையினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv