Monday , August 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சபாநாயகர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

சபாநாயகர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாடாளுமன்றில் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சீர்கேடான செயற்பாடுகள் இனி இடம்பெற இடமளிக்கப்போவதில்லை என்பதோடு நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் இடம்பெற்ற சகல நடவடிக்கைகளுக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.

இதேவேளை, மறைக்கல்வியினூடாக சிறுவர்கள் கற்றுக்கொள்ளும் நன்நடத்தைகளை போன்று நாட்டின் மீயுயர் நிறுவனமாகிய நாடாளுமன்றினூடாகவும் நன்நடத்தைக்களை சிறுவர்கள் கற்றுக்கொள்ள கூடிய சூழல் விரைவில் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவலர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் புலமைப் பரிசில்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே சபாநாயகர் மேற்கண்டாறு தெரிவித்தார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv