சமூக வலைத்தளங்கள் பாவனைமீது அரசு வித்துள்ள தற்காலிக தடை இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கல் செலுத்தியுள்ளதுடன்இ பொருளாதார சரிவுக்கு வழிவகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண்டி நிர்வாகப் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த இநனவாத வன்முறைகள் காரணமாக இலங்கை முழுவதும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த முதன் கிழமை முதல் அவசரகால நிலையும் நாடு பூராக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவசரகால நிலை நீக்கப்படும்வரை சமூக வலைத்தளங்கள் பாவனைக்கு எதிராக அரசு விதித்துள்ள தடை தொடருமொன்று அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
இந்நிலையில்இ சமூக வலைத்தளங்களாக பேஸ்புக்இ வட்ஸ்எப்இ வைபர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பாரிய மற்றும் சாதாரண அளவிலான வர்த்தக தொடர்பாடல்கள் இடம்பெற்றுவந்துள்ளன. குறிப்பாக இலங்கை – இந்தியா, இலங்கை – மத்திய கிழக்கு மற்றும் உலகின் பல்வேறு நாடுகளுடன் வர்த்தகர்கள் தொடர்புகளை பேணிவந்துள்ளனர்.
கடந்த ஐந்து நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரிமாற்றிக்கொள்ள முடியாது போயுள்ளமையால் இலங்கையில் பொருளாதாரத்தில் இந்த விடயம் தாக்கத்தை செலுத்தியுள்ளது. சில ஏற்றுமதிஇ இறக்குமதிகளும் தொடர்பாடல் இன்மையால் துண்டிக்கப்பட்டுள்ளது. பல மில்லியன்கள் வரையில் நஷ்டம் ஏற்பட்டிருக்க கூடுமென தகவல்கள் வெளியாகியுள்ளது. அரச தரப்பில் இருந்து இதுவரை இது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.