ரணிலிடம் சம்பந்தர் விடுத்துள்ள கோரிக்கை
எதிர்க்கட்சி பதவியை சஜித்பிறேமதாசவிற்கு விட்டுக்கொடுக்குமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரமேதாச, மக்களின் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற இளம் தலைவர் என குறிப்பிட்ட சம்பந்தர் அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு ரணில் இடமளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் அதுவே ஜனநாயக மரபு எனவும் கூரிய சம்பந்தர், நாம் யாரையும் ஆழமாக ஆதரிக்கவில்லை என்றும் தேர்தலில் நின்ற இரு பகுதியினருடனும் தொடர்புகளை வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் எமது எதிர்கால நிலைப்பாடு குறித்து, ஜனநாயக ரீதியான முடிவுகளை நாம் எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது மக்களைப் பொறுத்தளவில் நடந்து முடிந்தத் தேர்தலில் ஒற்றுமையாக வாக்களித்துள்ள நிலையில், அவர்களிடத்தில் ஒற்றுமை மேம்பட்டதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றதாகவும், எனவே எதிர்காலத்திலும் மக்கள் ஓரணியாக நின்றுச் செயற்படவேண்டும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

