கோத்தபாயவிற்கு சவால் விடும் சஜித்
தொலைக்காட்சி நேரடி விவாதத்திற்கு தன்னுடன் வருமாறு கோட்டாபய ராஜபக்சவிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார் சஜித் பிரேமதாச.
அவர் இன்று தனது ருவிற்றர் பக்கத்தில் இந்த சவாலை விடுத்துள்ளார்.
“ஒரு வலுவான வேட்பாளர் தங்கள் எதிர் வேட்பாளர்களுடன் நேரடி கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட பயப்படத் தேவையில்லை என்று புதிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் தெரிவித்துள்ளார்.
பகிரங்க விவாதத்தின் மூலம் மக்கள் இரண்டு வேட்பாளர்களின் கொள்கைகள், பார்வைகளையும் ஒப்பிட்டு பார்க்க உதவியாக அமையுமென்றும் சஜித் குறிப்பிட்டார்.
எனினும், மேடைப்பேச்சுக்களில் திணறி வரும் கோட்டாபய, அண்மைய செய்தியாளர் சந்திப்பொன்றில், பகிரங்க விவாதங்களை விட, வேலை செய்வதிலேயே அக்கறை காண்பிக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.
https://twitter.com/sajithpremadasa/status/1186823497504514049




