Monday , June 30 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தேர்தலை அறிவிக்கும்படி ஜனாதிபதிக்கு கோரிக்கை

தேர்தலை அறிவிக்கும்படி ஜனாதிபதிக்கு கோரிக்கை

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக உடனடியாக ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவித்தலை விடுக்குமாறு கோரி ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கமைய ஜனவரி 9ஆம் திகதிக்கு பின்னர் எவ்வேளையிலும் தேர்தலுக்கான அறிவித்தலை விடுக்க முடியும்.

இதனால் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைக்கு இதுவே தீர்வாகும் என கூறி ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , ஜனநாயக மக்கள் முன்னணி , ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv