தெஹியத்தகண்டிய பிரதேசசபைக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீதியரசர் பிரியசாத் டெப், சிசிர த ஆப்ரூ மற்றும் நலின் பெரேரா ஆகியோர் அடங்கிய Trial at Bar தீர்ப்பாயம் முன்னிலையிலேயே மனு தாக்கல் செய்யப்பட்டது.