ஐக்கிய தேசியக்கட்சி முக்கியஸ்தர்களிற்கு ரணில் கடுமையான உத்தரவு!
ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாகரிகமாக செயற்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் மத்துகமவில் நடந்த நிகழ்வில் ஹேஷா விதானகே உரையாற்றிய போது, சஜித் தேர்தலில் வெற்றிபெற்றதும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஜம்பர் அணிய வேண்டி வருவமென கூறியிருந்தார்.
இதனால் கோத்தபாய உச்ச மகிழ்ச்சியில் உள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்தே இன்று கட்சி உறுப்பினர்களிற்கு ரணில் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
இன்று அலரி மாளிகையில் கட்சி முக்கியஸ்தர்களை சந்தித்து பேசியபோது இதனை தெரிவித்துள்ளார்.
எங்கள் வேட்பாளரை வெற்றியடைய செய்யவே நாம் முயற்சிக்க வேண்டும். எதிரணி வேட்பாளரை ஜம்பர் அணிய செய்ய அல்ல என ரணில் குறிப்பிட்டுள்ளார்.




