இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றின் போது ஒருவர், பியர் மதுபான போத்தலால் குத்தப்பட்டு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நாவலப்பிட்டி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று முற்பகல் இடம்பெற்றது.
உயிரிழந்தவரின் சடலம் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.