பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அவசர சிங்கப்பூர் விஜயம் தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரதமரின் இந்த விஜயத்தின் பின்னர் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் இருக்கும் இடத்தை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கேட்டு அறிந்து கொள்ளலாம் என குறித்த அமைப்பின் பொதுச் செயலாளர் மாகலகந்தே சுதத்த தேரர் கூறியுள்ளார்.
அத்துடன், பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக ஜனாதிபதி செயற்படும் விதம் குறித்து நாட்டு மக்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.