Sunday , June 29 2025
Home / முக்கிய செய்திகள் / நாடாளுமன்றில் மஹிந்த அணியினரால் அமளிதுமளி; நாளை வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றில் மஹிந்த அணியினரால் அமளிதுமளி; நாளை வரை ஒத்திவைப்பு

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இன்றைய தினம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவிருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான தரப்பினரது தொடர் இடையூறுகளால் சபை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த விவாதத்தை சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையான மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் சபையில் கொண்டுவந்தது.

எனினும், விவாதம் ஆரம்பமாவதற்கு முன்னர் நேரப்பிரச்சினையை ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் சுட்டிக்காட்டியதால் சபையில் அமளி ஏற்பட்டது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியிலுள்ள 52 பேர்கொண்ட உறுப்பினர்களுக்கு வெறும் 32 நிமிடங்கள் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக நேரம் வழங்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலை நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன சபையில் முன்வைத்தார்.

இதன்போது குறுக்கீடு செய்த எதிர்கட்சி பிரதம கொறடா அநுரகுமார திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்திலேயே கூட்டு எதிரணியினருக்கும் நேரம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இதனால் சர்ச்சை நீடித்ததோடு, சபையில் அமைதியை ஏற்படுத்த சபாநாயகரால் முடியாமற்போனதை அடுத்து அவை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv