Tuesday , May 14 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ஓபிஎஸ் பேச்சு: தமிழ் திரையுலகம் என்ன சொல்கிறது?

ஓபிஎஸ் பேச்சு: தமிழ் திரையுலகம் என்ன சொல்கிறது?

ஓபிஎஸ் பேச்சு: தமிழ் திரையுலகம் என்ன சொல்கிறது?

கமல்ஹாசன்: பிப்ரவரி 7. அதே நாளில் சில வருடங்களுக்கு முன்னால் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக ஒரு கலைஞனுக்கு தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஆதரவளித்தார்கள் என்பதைக் கண்டுகொண்டேன். தமிழ்நாடு உறங்கச்செல்லட்டும். நமக்கு முன்னால் அவர்கள் விழித்துக்கொள்வார்கள்.

சித்தார்த்: மெரினாவில் ஓபிஎஸ். தமிழக அரசியல் உண்மையான ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ மற்றும் ‘ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்’ சீரியல்களைப் போலவே இருக்கிறது.

ஆர்யா: சரியான நேரத்தில் துணிவான, சிறந்த பேச்சு ஓபிஎஸ் சார். பாராட்டுகள்.

அருள்நிதி: தைரியமான பேச்சு. தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையை அறியச் செய்து, அவர்களிடத்தில் நேர்மையாக நடந்திருக்கிறார் ஓபிஎஸ்.

இமான்: இதுதான் சிறந்த வழி. தமிழ்நாட்டு அரசியலில் நம்பிக்கையை துளிர்விட்டிருக்கிறது. சரியான இடத்தில் இருந்து, சரியான நேரத்தில், சரியான பேச்சு! நீதி நிலை நாட்டப்பட்டிருக்கிறது. #OPS

ஆதிக் ரவிச்சந்திரன்: ‘கண்ணா சிங்கம் சிங்கிளாதான் வரும்!’ #OPS வீரப்பேச்சு. எங்களின் இதயத்தை வென்றுவிட்டீர்கள். ரகசியமாகப் புதைந்துகிடக்கும் உண்மைகளையும் வெளிக்கொண்டு வாருங்கள். நாங்கள் காத்திருக்கிறோம். #OPSsirappu

தயா அழகிரி: ஓபிஎஸ் இத்தனையையும் புதைத்து வைத்திருந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் ஆகச் சிறப்பு முதல்வரே!எப்போது வேண்டுமானாலும் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்படாலாம். ஆனாலும் துணிவாகப் பேசியிருக்கிறார். #OPS #Modi தமிழ்நாட்டில் மீண்டும் ஒருமுறை மோடி அலை.

குஷ்பு: திகைப்புடன் காத்திருக்கிறேன். ஓபிஎஸ் மவுனத்தைக் கலைப்பார் என்று நம்புகிறோம். போராட்டமா இல்லை வெறும் அஞ்சலியா? நாடகத்தின் முடிச்சு முழுமையாக அவிழட்டும். ஒரு தலைவர் உதயமாகிறார்.

எஸ்.வி.சேகர்: ‘அதிமுகவில் ஓர் ஆண் மகன்’. ஒரு பொருளாளர் நீக்கத்தில் பிறந்ததுதான் ADMK எனும் கட்சி. வரலாறு திரும்புகிறதா?!

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …