Tuesday , October 14 2025
Home / முக்கிய செய்திகள் / கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது.!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது.!

இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வந்த நபர் ஒருவர் நேற்று நண்பகல் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

35 வயதான குறித்த சந்தேகநபர் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

ஏசியா எயார்லைன்சுக்கு சொந்தமான எ.கெ 043 என்ற விமானத்தில் மலேசியா கோலாலம்பூரியில் இருந்து வருகை தந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரின் பயணப் பொதியில் இருந்து 355 கிராம் நிறையுடைய 19 இலச்சத்து 19,56,570 ரூபா பெறுமதியான தங்கம் மீட்கப்பட்டதாக சுங்க திணைக்கள ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தங்கம் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv