பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ள போட்டியாளர்களை பார்ப்பதற்கு அவர்களது குடும்பத்து உறவினர்கள் ஒவ்வொருவராக அழைத்து வரப்படுகின்றனர்.
அதில் ஒரு போட்டியாளரான பாலாஜிக்கு அவரது மனைவி நித்யா, யாருடைய முகத்துக்கு பின்னால் பேசுவதை நிறுத்துங்கள் என்றும் நான் உங்களது தோழி மட்டுமே என கூறியிருந்தார்.
இதனை படித்து பாலாஜியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் தனது குழந்தையோடு தாடி பாலாஜியை பார்க்க சென்ற நித்யா, பாலாஜியை பார்த்தவுடன் கண்ணீர் விட்டுள்ளார்.
மன்னித்துவிடுங்கள், நீங்கள் அழவதை பார்க்க எனக்கு வேதனையாக இருந்தது, நீங்கள் அழவதை பார்த்து 9 வருடங்கள் ஆகிவிட்டது. நீங்கள் மாறிவிட்டதாக அனைவரும் கூறுகிறார் என தெரிவித்துள்ளார்.