Friday , June 27 2025
Home / முக்கிய செய்திகள் / முன்னாள் கடற்படை பேச்சாளருக்கு விளக்கமறியல்

முன்னாள் கடற்படை பேச்சாளருக்கு விளக்கமறியல்

கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கப்டன் டி.கே.பி.தஸநாயக்கவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த புதன்கிழமை முன்னாள் கடற்படை பேச்சாளர் டீ.கே.பி. திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.

அதன்படி இன்று(வெள்ளிக்கிழமை) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv