யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் தர்சன ஹெற்றியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ். படைகளின் தலைமையக கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதை அடுத்தே இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு படைகளின் தலைமையக தளபதியாக கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் தர்சன ஹெற்றியாராச்சி இன்று முதல் யாழ். படைகளின் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.