Monday , August 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஹிஸ்­புல்­லாவை பாது­காக்க மைத்திரி முயற்­சி?

ஹிஸ்­புல்­லாவை பாது­காக்க மைத்திரி முயற்­சி?

நிதிச் சுத்­தி­க­ரிப்பு சட்­ட­மூ­லத்­தி­னூ­டாக மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழக தனியார் நிறு­வ­னத்­துக்கு எதி­ராக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். இந்த நிறு­வ­னத்தின் செயற்­பா­டு­க­ளுக்­கென கைமாற்­றப்­பட்­டுள்ள நிதி தொடர்பில் பரந்­து­பட்ட விசா­ர­ணைகள் அவ­சிய­மா­ன­தாகும். முன்னாள் ஆளுநர் ஹிஸ்­புல்லா, ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பினர் என்­ப­தற்­காக அவரைப் பாது­காக்க முயற்­சிப்­பது நியா­ய­மற்­றது என்று ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காவிந்த ஜெய­வர்­தன தெரி­வித்தார்.

நீர்­கொ­ழும்பு பிர­தே­சத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும்போது அவர் மேலும் கூறி­ய­தா­வது,

மட்­டக்­க­ளப்பு கெம்பஸ் தனியார் நிறு­வனம் சட்­டத்­துக்கு முர­ணா­ன­தாகும். நிதி சுத்­தி­க­ரிப்பு சட்­ட­மூ­லத்­தி­னூ­டாக இந்த நிறு­வ­னத்­துக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க முடியும். இன்று அது உறு­திப்­ப­டுத்­தப்­பட்டும் உள்­ளது.

ஆகவே இந்த தனியார் நிறு­வனம் தொடர்பில் விசா­ர­ணைகள் முறை­யாக இடம்­பெற்­ற­னவா என்ற பிரச்­சி­னையும் எமக்குள்­ளது. இந்த நிறு­வ­னத்தின் நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளுக்­கென வெளி­நாட்­டி­லி­ருந்து 3 பில்­லியன் ரூபா நிதி பெற்­றுக்­கொள்ளப்பட்­டுள்­ளது.

வேலை­வாய்ப்­பு­க்க­ளுக்­காக வெளி­நாடு சென்று தொழில்­பு­ரியும் தொழி­லாளி சேக­ரித்த பணத்தை இங்கு அனுப்பும் போது, அந்த பணம் தொடர்பில் பல்­வேறு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அவ்­வாறு இருக்­கையில் இந்த நிறு­வ­னத்­துக்கு என பரி­மாற்­றப்­பட்­டுள்ள நிதி தொடர்பில் விசா­ர­ணைகள் மேற்­கொண்­டி­ருக்க வேண்டும். எதற்­காக இந்தப் பணம் இங்கு வந்­தது, எவ்­வாறு திரட்­டப்­பட்­டது, பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளு­க்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டதா என்­பது குறித்து முக்­கிய அவ­தானம் செலுத்­தி­யி­ருக்க வேண்டும்.

அந்த விசா­ர­ணை­களின் அறிக்கை குற்­ற­ப்பு­ல­னாய்வு பிரி­வுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். குற்­ற­ப்பு­ல­னாய்வுப் பிரிவு இது தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தி­ருக்க வேண்டும். ஆனால் இந்த நடை­மு­றைகள் முறை­யாக இடம்­பெற்­ற­னவா என்­பதில் எமக்கு சந்­தேகம் எழுந்­துள்­ளது.

சட்டம் ஒழுங்கு அமைச்சு தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பொறுப்­பி­லேயே உள்­ளது. எனவே மட்­டக்­க­ளப்பு கெம்பஸ் தனியார் நிறுவனம் தொடர்பில் பரந்துபட்ட விசாரணைகளை முன்னெடுப்பது அவசியமாகும். ஜனாதி பதி இது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். ஹிஸ்புல்லா ஸ்ரீல ங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் என்ப தற்காக அவரை பாதுகாக்க முயற்சிப்பது நியாயமற்றதாகும்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv