Tuesday , June 10 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மஹிந்த அணியால் சபையில் சலசலப்பு

மஹிந்த அணியால் சபையில் சலசலப்பு

மாகாண சபை தேர்தலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் நடத்துவதற்கான பிரேரணை இதுவரை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படாமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இன்று நாடாளுமன்றத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதனைத் தொடர்ந்து வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv