Tuesday , June 10 2025
Home / முக்கிய செய்திகள் / இஸ்லாமிய நாடுகளின் இராஜதந்திரிகளை அவசரமாக சந்தித்தார் மஹிந்த

இஸ்லாமிய நாடுகளின் இராஜதந்திரிகளை அவசரமாக சந்தித்தார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபத மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் உள்ள இஸ்லாமிய நாடுகளின்; இராஜதந்திரிகளை சந்தித்து சமகால நிலவரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கண்டி மற்றும் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமை குறித்து விளக்கமளிப்பதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களை அவசரமாகச் சந்தித்துள்ளார்.

எனினும்,இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் இதுவும் வெளியாகவில்லை.

அம்பாறை மற்றும் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரங்களின் பின்னணியில், மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களே உள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv