Monday , June 9 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மஹிந்தவிற்கு இன்று நீதிமன்றத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி

மஹிந்தவிற்கு இன்று நீதிமன்றத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சர்களுக்கும் பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளை தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக தாக்கல் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, மனு மீதான விசாரணையை பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதவான் அறிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்குமாறு குறிப்பிட்டு மஹிந்த ராஜபக் தரப்பினரால் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் நல்ல செய்தி கிடைக்கும் என்ற சூழலில் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் மகிந்தவிற்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv