பிக்பாஸ் வீட்டில் இப்போது 11 பிரபலங்களே இருக்கின்றனர். வாரங்கள் செல்ல போட்டியாளர்களுக்குள்ளும் கோபம், வெறுப்பு என வர ஆரம்பித்துள்ளது.
வீட்டில் பல பிரச்சனைகளுக்கு காரணமாக வைஷ்ணவி இப்போது சீக்ரெட் அறையில் இருக்கிறார். இந்த நேரத்தில் பிக்பாஸ் புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தாடி பாலாஜி தன்னைத் தானே எலிமினேஷனுக்கு நாமினேட் செய்து கொள்கிறார். அவர் அப்படி செய்துக் கொண்டதற்கு மற்றவர்கள் பிரச்சனை குறித்து பேசுகின்றனர்.
திடீரென்று கோபமான மஹத் தன்னைத் தானே பயங்கரமாக அடித்துக் கொள்கிறார். இதனால் போட்டியாளர்கள் கொஞ்சம் பயப்பட்டது போன காணப்படுகின்றனர்.