Saturday , June 28 2025
Home / முக்கிய செய்திகள் / இழப்பீடு வழங்கும் பணியகத்தை ஆமைக்கிறது இலங்கை அரசு

இழப்பீடு வழங்கும் பணியகத்தை ஆமைக்கிறது இலங்கை அரசு

யுத்தம், உள்நாட்டு அமைதியின்மையால் பாதிக்கப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்குமான பணியகத்தை நிறுவ அரசு முடிவு செய்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகம் உருவாக்கப்பட்டதை அடுத்து, இழப்பீட்டுப் பணியகத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான யோசனை கடந்தவாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இன, மத வேறுபாடும் இன்றி, காவல்துறை, பாதுகாப்புப் படையினரின் குடும்பங்கள் மற்றும் எல்லைக் கிராமங்களில் நெருக்கடிகளை எதிர்கொண்டவர்கள் உள்ளிட்ட நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் அனைவரும் இந்தப் பணியகத்திடம் இழப்பீட்டுக்கான கோரிக்கைகளை முன்வைக்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இழப்பீடுகளை வழங்குவதற்கு சுதந்திரமான அமைப்பு ஒன்று நிறுவப்பட வேண்டும். அமைச்சரவையால் காலத்துக்குக் காலம் அங்கீகரிக்கப்படும் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாக இது செயற்பட வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv