Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பொன்சேகாவுக்கு கோட்டா திடீர் அழைப்பு!

பொன்சேகாவுக்கு கோட்டா திடீர் அழைப்பு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படும் நோக்கில் , அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா முயற்சித்து வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் களனி பிரதேச சபை உறுப்பினர் மனோஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அண்மையில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து சரத் பொன்சேக்காவுக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தாகவும் , அதில் பழைய கோபத்தை விட்டு தம்முடன் இணைந்து பயணிக்க முன் வருமாறு , கோட்டாபய பொன்சேகாவிற்கு அழைப்பு விடுத்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கோட்டாவின் அழைப்பை பொன்சேக்கா நிராகரிக்கவில்லை எனவும் ஐ. தே. கட்சியின் முன்னாள் களனி பிரதேச சபை உறுப்பினர் மனோஜ் பெரேரா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv