Monday , August 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தேர்தலில் வெற்றி பெற புது முயற்சியில் ஈடுபட்ட சுதந்திர கட்சி

தேர்தலில் வெற்றி பெற புது முயற்சியில் ஈடுபட்ட சுதந்திர கட்சி

பெரும் கூட்­ட­ணியை அமைத்­துத் தேர்­தலை எதிர்­கொள்­ளத் தயா­ராகி வரு­கின்­றோம். அதற்­கா­கத் தமிழ், முஸ்­லிம் கட்­சி­க­ளை­யும் அழைத்­துள்­ளோம். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் எதிர்ப்­புக் குழுக்­க­ளை­யும் இணைக்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ளோம்.இவ்­வாறு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் செய­லர் றோகண லக்ஸ்­மன் பிய­தாச தெரி­வித்­தார்.

எதிர்­வ­ரும் தேர்­தல்­கள் தொடர்­பாக சுதந்­தி­ரக் கட்சி எடுத்­து­வ­ரும் நட­வ­டிக்­கை­கள் தொடர்­பாக விளக்­க­ம­ளிக்­கும் ­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது இந்த ஆண்­டின் ஆரம்­பத்­தில் மாகாண சபைத் தேர்­தல் நடை­பெ­ற­வுள்­ளது. அதன்­பின்­னரே அரச தலை­வர் தேர்­தல் நடை­பெ­றும். பின்­னர் பொதுத் தேர்­தல் நடை­ட­பெ­றும். எந்­தத் தேர்­தல் நடந்­தா­லும் அதை எதிர்­கொள்ள சுதந்­தி­ரக் கட்சி தய­ராக உள்­ளது. ஆனால் நாம் கூட்­டணி அமைத்­துத் தேர்­தலை எதிர்­கொள்­ள­வது தொடர்­பா­கவே ஆலோ­சிக்­கின்­றோம்.

நாம் தமிழ், முஸ்­லிம் கட்­சி­க­ளை­யும் அழைத்­துள்­ளோம். அவர்­கள் விரை­வில் தமது நிலைப்­பாட்டை அறி­விப்­பார்­கள் என்று எதிர்­பார்க்­கின்­றோம். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் கொள்கை நாட் ­டுக்­குப் பொருத்­த­மற்­றது. எமது நாட்­டின் வளங்­களை ஏனைய நாடு­க­ளுக்கு விற்­பதை அனு­ம­திக்க முடி­யாது.

பொதுமக்கள் முன்னணிக் கட்­சி­யும் கூட் ­டணி அமைத்தே எதிர்­வ­ரும் தேர்­தல்­க­ளைச் சந்­திக்­கும் என்று முன்­னாள் அமைச் ­சர் பசில் ராஜ­பக்ச தெரி­வித்­துள்­ளார்.

கூட்­ட­ணி­யின் சின்­னம் தொடர்­பா­கப் பல கருத்­துக்­கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. கட்­சி­க­ளின் முக்­கிய உறுப்­பி­னர்­க­ளு­டன் இது தொடர்­பாக இணக்­கப்­பாடு எட்­ட­லாம் என்ற நம்­பிக்கை எமக்­கி­ருக்­கின்­றது.

பொதுமக்கள் முன்னணி கட்­சி­யின் சில உறுப்­பி­னர்­கள் மொட்டுச் சின்­னத்தை விட்­டுக் கொடுக்க மாட்­டோம் என்­கின்­ற­னர். தமது கருத்­துக்­க­ளும் ஊட­கங்­க­ளில் வர வேண்­டும் என்­ப­தற்­கா­கவே அப்­ப­டிக் கூறு­கின்­ற­னர் என்­றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv