Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / முள்­ளி­ய­வ­ளை­யில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்!!

முள்­ளி­ய­வ­ளை­யில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்!!

முல்­லைத்­தீவு, முள்­ளி­ய­வ­ளை­யில் நேற்று இரவு நடந்த வாள்­வெட்டு மற்­றும் தாக்­கு­த­லில் இரு­வா் படு­கா­ய­ம­டைந்­த­னர். இந்­தச் சம்­ப­வம் இரவு 7 மணி­ய­ள­வில் நடந்­துள்­ளது.

முள்­ளி­ய­வளை 4 ஆம் வட்­டா­ரத்­தைச் சேர்ந்த ஜெய­சீ­லன் ஜனு­ராஜ் (வயது -20), முள்­ளி­ய­வளை 2ஆம் வட்­டா­ரத்­தைச் சேர்ந்த தங்­க­ராசா டியானு (வயது-20) ஆகி­யோரே காய­ம­டைந்­த­னர். ஒரு­வர் வெட்­டுக்­கா­யங்­க­ளு­ட­னும், மற்­றை­ய­வர் அடி­கா­யங்­க­ளு­ட­னும் மாவட்ட மருத்­து­வ­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இரு குழுக்­க­ளுக்­கி­டையே ஏற்­பட்ட வாய்த்­தர்க்­கம் கைலப்­பில் முடிந்­தது என்­றும், அதில் ஒரு குழு மற்­றைய குழு மீது முள்­ளி­ய­வளை சந்­தைக்கு அண்­மித்த பகு­தி­யில் வைத்து வாள், கோட­ரி­க­ளால் தாக்­கு­தல் நடத்­தி­யது என்­றும் கூறப்­ப­டு­கின்­றது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் முள்­ளி­ய­வ­ளைப் பொலி­ஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. முள்­ளி­ய­வ­ளைப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv