Thursday , March 28 2024
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / அபிநந்தன் விடுதலை குறித்து இம்ரான்கான் முக்கிய அறிவிப்பு!

அபிநந்தன் விடுதலை குறித்து இம்ரான்கான் முக்கிய அறிவிப்பு!

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள அபிநந்தனை எப்போது வெளியே விடுவோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி விளக்கம் அளித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்து பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது.

அதனையடுத்து நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்ட காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெளியாகியுள்ள அந்த காணொளியில் அவர் தேநீர் அருந்தி கொண்டு பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

அந்த காணொளியில் நீங்கள் இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற கேள்விக்கு நான் தென்னிந்தியாவை சேர்ந்தவன் என உறுதியாக பதிலளிக்கிறார் அபிநந்தன். மற்ற கேள்விகளுக்கு பதில் கூற மறுத்துவிட்டார்.

இந்நிலையில், அபிநந்தனை எப்போது வெளியே விடுவோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் இடையே கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்தியாவுடன் போருக்கு செல்ல விருப்பம் இல்லை.

இந்தியாவில் தாக்குதல் நடத்தவும் எங்களுக்கு விருப்பமே இல்லை. இந்த பிரச்சனைகள் சரியாக வேண்டும் என நாங்கள் காத்திருக்கிறோம்.

இந்த பிரச்சனைகள் மொத்தமாக சரியானால் இந்திய விமானி அபிநந்தனை விடுவிப்போம். போர் பதற்றம் எல்லாம் தணிந்தால் இந்திய விமானியை விடுவிப்போம், அவர் எங்கள் கஸ்டடியில் மிகவும் பாதுகாப்பாக உள்ளார் என குரேஷி தெரிவித்து இருக்கிறார்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொலைபேசி வாயிலாக பேச உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv