Wednesday , October 15 2025
Home / முக்கிய செய்திகள் / விவ­சாய நிலங்­கங்களுக்குப் பாதிப்பு!

விவ­சாய நிலங்­கங்களுக்குப் பாதிப்பு!

விசு­வ­மடு புதிய புன்னை நீரா­வி­ய­டிப் ­ப­கு­தி­யில் கால் நடை­க­ளால் விவ­சாய நிலங்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன என விவ­சா­யி­கள் கவலை தெரி­வித்­துள்­ளார்­கள்.

முல்­லைத்­தீவு, விசு­வ­ம­டுப் பகுதி கால்­நடை வளர்ப்­பா­ளர்­கள் வயல்­நி­லங்­க­ளில் தமது கால்­ந­டை­களை மேய்ச்­ச ­லுக்­காக அனுப்­பி ­வி­டு­கின்­றார்­கள். இத­னால் நெற்­ப­யிர்­களைக் கால்­ந­டை­கள் மேய்­கின்­றன.

வயல் நிலங்­கள் அழி­வ­டைந்து செல்­கின்­றன. கால்­நடை உரி­மை­யா­ளர்­க­ளுக்குத் தெரி­யப்­ப­டுத்­தி­யும் அவற்றைக் கட்­டுப்­ப­டுத்த எது­வித நட­வ­டிக்­கை­க­ளும் எடுக்­க­வில்லை என வயல்­நில உரி­மை­யா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

புன்­னை­நீ­ரா­வி­ய­டிப் பகு­தி­யில் 30 ஏக்­கர் வரை­யில் வயல் விதைக்­கப்­பட்டுள் ளது. இங்கு அதி­க­மா­ன­வர்­கள் வீடு­க­ளில் கால்­ந­டை­களை வளர்க்­கின்­றார்­கள். இதனை சம்பந்­தப்­பட்ட அதி­காரி­க­ளி­டம் தெரி­வித்­தும் எது­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை என மேலும் தெரி­வித்­த­னர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv