Monday , June 30 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / எமது மக்களுக்கு சிறந்த தீர்வொன்றை பெற்றுக் கொடுத்து விட்டே இறப்பேன்

எமது மக்களுக்கு சிறந்த தீர்வொன்றை பெற்றுக் கொடுத்து விட்டே இறப்பேன்

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு சார்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான கட்டுப் பணம் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஊடகங்களிற்கு ஆனந்தசங்கரி கருத்து தெரிவிக்கையில்

“எமது கூட்டணியானது இம் முறை களமிறங்குவது தொடர்பில் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு உள்ளது கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எம்மால் பெற்றுக் கொடுக்கக் கூடிய நிலையில் இருந்த தீர்வுகளை விடுதலைப் புலிகள் கூட ஏற்றுக் கொண்ட நிலையில் சிலர் தமது அரசியல் அபிலாசைகளுக்காக துரோகத்தனமான வேலைகளை செய்திருந்தனர் அவர்களைப் போல் கதிரைக்காக அடிபடுபவர்கள் அல்ல துரோக வேலைகளை நாமும் செய்திருந்தால் நாம் இப்பொழுதும் கதிரையிலையே இருந்திருப்போம் எனக்கு நன்றாக வயது சென்று விட்டது நான் இறப்பதற்கு முன்னர் எனக்கு நடந்த துரோகங்களுக்கு சவாலாக எமது மக்களுக்கு சிறந்த தீர்வொன்றை பெற்றுக் கொடுத்து விட்டே இறப்பேன்” எனவும் தெரிவித்தார்

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv