தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்குப் பல வழிகளிலும் நாம் முயற்சித்தோம்.
அரசமைப்பில் மாற்றம் கொண்டுவருவதற்கும் உத்தேசித்திருந்தோம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதயசுத்தியுடன் செயற்படாததாலேயே அந்த முயற்சிகள் கைகூடவில்லை.
இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது-,
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டியிலிருந்து நான் இன்னும் பின்வாங்கவில்லை. அரசியல் தீர்வை நோக்கிப் பயணிப்பதற்காகத் என்னால் விடுக்கப்பட்ட அழைப்புகளை சம்பந்தன் நிராகரித்தே செயற்பட்டார்.
தாமரை மொட்டு சின்னத்தில் எனது தலைமையின்கீழ் சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி நாட்டின் அரசியல் சக்தியாக மாற்றமடையுமாக இருந்தால் தமிழர்கள் மட்டுமன்றி, சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளும் அரசமைப்பை உருவாக்குவேன்.
புதிய அரசமைப்பை இந்த அரசு உருவாக்கினாலும் அனைத்து இன மக்களின் சம்மதத்தடன் மட்டுமே அதனை மேற்கொள்ளவேண்டும் – என்றார்.