Tuesday , May 14 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மயிலிட்டி துறைமுகம் நாளை மக்களிடம் கையளிப்பு!

மயிலிட்டி துறைமுகம் நாளை மக்களிடம் கையளிப்பு!

மயிலிட்டி துறைமுகம் நாளை மக்களிடம் கையளிப்பு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வட மாகாணத்திற்கான இருநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அந்தவகையில் இன்று அவர் வவுனியா மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளார்.

பிரதமருடன் இந்த விஜயத்தில் அமைச்சர்கள் பட்டாளமும் இணைந்துள்ளது.

இன்று அவர் வவு­னியா மருத்­து­வ­மனை­யில் இரண்­டா­வது சுகா­ தா­ரத் துறை மேம்­ப­டுத்­தல் அபி­வி­ருத்தி திட்­டத்­தின்கீழ் உரு­வாக்­கப்­பட்ட விபத்து மற்­றும் அவ­சர சிகிச்­சைப் பிரிவை மக்­கள் பயன்­பாட்­டுக்கு கைய­ளிக்­க­வுள்­ளார்.

அதோடு நெதர்­லாந்து அர­சால் வழங்­கப்­ப­ட­வுள்ள இல­குக் கடன் உத­வி­யில் அமைக்­கப்­ப­ட­ வுள்ள இரு­தய மற்­றும் சிறு­நீ­ரக சிகிச்சை பிரி­வுக்­கான அடிக்­கல்­லை­யும் பிரதமர் நாட்ட வுள்­ளார்.

இந்த நிகழ்­வு­க­ளில் சுகா­தார அமைச்­சர் ராஜித சேனா­ரத்­தின, நெதர்­லாந்­துத் துணைத் தூது­வர் ஈவா வான்­வோ­சம், வட மாகாண ஆளு­னர் சுரேன் ராக­வன் மற்­றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ னர்­களும் கலந்து கொள்­ள­வுள்­ள­னர்.

இந்நிலையில் பிரதமரின் விஜயத்தையிட்டு வவு­னியா மருத்­து­வ­னைக்கு அரு­கில் உள்ள வர்த்­தக நிலை­ யங்­க­ளின் தக­வல்­கள் மற்­றும் உரி­மை­யா­ளர்கள் , பணி­பு­ரி­ப­வர்­க­ளது தக­வல்­களை பொலிஸார் திரட்டியிருந்தனர்.

இதேவேளை ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாளை யாழ்ப்­பா­ணத்­துக்­கு விஜயம் செய்யவுள்ள்தோடு, அங்கும் பல அபி­வி­ருத்­தித் திட்­டங்­ களை ஆரம்­பிக்­க­வுள்­ ளார்.

அத்துடன் மயி­லிட்­டி­யில் அமைக்­கப்­பட்ட துறை­மு­கத்­தைத் மக்­ க­ளு­டைய பாவ­னைக்­குக் பிரதமர் கைய­ளிப்­பதோடு, இந்­திய நிதி­யு­த­வில் அமைக்­கப்­ பட்­டு­வ­ரும் யாழ்ப்­பா­ணக் கலா­சார மண்­ட­பத்­தின் கட்­டு­மா­னப் பணி­க­ளை­யும் அவர் பார்­வை­யி­டு­வார் என்றும் தெரி­ விக்­கப்­பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv