Saturday , June 28 2025
Home / முக்கிய செய்திகள் / தேவை ஏற்பட்டால் அரசியலில் பிரவேசம் : கோட்டா

தேவை ஏற்பட்டால் அரசியலில் பிரவேசம் : கோட்டா

மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வரவேண்டிய அவசியமில்லை. எந்த வழியில் வேண்டுமானாலும் சேவை செய்ய முடியுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனினும், தேவை ஏற்பட்டால் அரசியலில் நுழைவது குறித்து தீர்மானிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

கோட்டாவின் அரசியல் பிரவேசம் தொடர்பாக அண்மைய காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அரசியலில் நுழைவது தொடர்பாக இதுவரை திட்டமிடவில்லையெனக் குறிப்பிட்ட கோட்டா, நாட்டிற்கு சேவையாற்ற விரும்புவதாகவும் அதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பிரதான கட்சிகளை விட மஹிந்த ஆதரவு பொதுஜன பெரமுன அதிக ஆசனங்களை கைப்பற்றியுள்ள நிலையில், ராஜபக்ஷாக்களின் அரசியல் மீள்வருகையானது பேசுபொருளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv