நீண்ட நாட்களுக்கு பின்னர் நல்ல தீர்ப்பு – ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா
ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி:
சொத்து குவிப்பு வழக்கு வழக்கில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. சிறைக்கு செல்ல வேண்டியவர்கள் தான் செல்கிறார்கள். இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன்.
எடப்பாடி பழனிச்சாமி தேர்வு என்பது ஜெ., விருப்பத்திற்கு மாறாக நடந்துள்ளது. சசிகலா குடும்பத்தினர் யாரை விரும்பினாரோ அவர்களுக்கு பதவியை அளிப்பார்கள் என்பது தெளிவாகியுள்ளது. கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தான் நடக்கிறது.
அவர்கள் யாரை வேண்டுமானாலும் நீக்குவார்கள். யாருக்கு வேண்டுமானாலும் பதவி அளிப்பார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதனை செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.




