Wednesday , August 20 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்த நபரை ஆஸ்திரேலிய போலீசார் கைது

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்த நபரை ஆஸ்திரேலிய போலீசார் கைது

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்த நபரை ஆஸ்திரேலிய போலீசார் கைது

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்த நபரை ஆஸ்திரேலிய போலீசார் இன்று கைது செய்தனர்.

சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், தற்போது ஏவுகணை தொழில் நுட்பத்தில் மிகவும் முன்னேறி வருகின்றனர். இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்ததாக அடையாளம் தெரியாத நபர் ஒருவரை ஆஸ்திரேலிய போலீசார் இன்று கைது செய்தனர்.

42 வயதான அந்த நபர், ஏவுகணைகள் கண்டறிவது எப்படி மற்றும் சொந்தமாக ஏவுகணைகள் உருவாக்குவது எப்படி? என ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சொல்லிக் கொடுத்ததாக போலீசார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.மேலும், ஏவுகணை தொழில் நுட்பங்கள் குறித்து அந்த மனிதர் ஆராய்ச்சி செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்தாண்டு 100 பேர் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்ததாக அந்நாட்டு குடியேற்ற அமைச்சர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …