Monday , June 30 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மைத்திரியும் – மஹிந்தவும் முதன் முறையாக ஒன்றாக

மைத்திரியும் – மஹிந்தவும் முதன் முறையாக ஒன்றாக

ஜனாதிபதியும் பிரதமரும் திஸ்ஸமஹாராம விகாரையில் சமய கிரியைகளில் ஈடுபட்டனர்.

தேசிய ஏர்பூட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று திஸ்ஸமஹாராம சந்தகிரிகொட வயல்வெளியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் திஸ்ஸமஹாராம விகாரைக்குச் சென்று சமய கிரியைகளில் ஈடுபட்டனர்.

திஸ்ஸமஹாராம ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய தேவாலேகம தம்மசேன நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பிரித் பாராயணம் செய்து ஆசீர்வதித்தனர்.

சமல் ராஜபக்ஷ், மஹிந்த அமரவீர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv