Tuesday , October 14 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கூட்டமைப்பு- காங்கிரஸ் இணைந்தாலே ஆட்சி!!

கூட்டமைப்பு- காங்கிரஸ் இணைந்தாலே ஆட்சி!!

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும், அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யும் இணை­யா­மல் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் ஆட்சி அமைப்­ப­தற்­கான வாய்ப்­புக்­கள் வெகு குறை­வா­கவே உள்­ளன. வெளி­யா­கி­யுள்ள தேர்­தல் முடி­வு­கள் இதைத் தெட்­டத் தெளி­வாக வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, கிளி­நொச்சி மாவட்­டத்­தின் பூந­கரி பிர­தேச சபை­யி­லும், திரு­கோ­ண­ மலை மாவட்­டத்­தின் வெரு­கல் பிர­தேச சபை­யி­லும் மாத்­தி­ரமே தனித்து ஆட்சி அமைக்க முடி­யும். ஊர்­கா­வற்று­றைப் பிர­தேச சபை­யில் ஈ.பி.டி.பி. தனித்து ஆட்சி அமைக்க முடி­யும்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு 27 சபை­க­ளில் கூடிய ஆச­னங்­க­ளை­யும், அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் 2 சபை­க­ளில் கூடிய ஆச­னங்­க­ளை­யும், ஐக்கிய தேசி­யக் கட்சி 2 சபை­க­ளில் கூடிய ஆச­னங்­க­ளை­யும், சிறி­லங்கா பொது­ஜன பெர­முன ஒரு சபை­யில் கூடிய ஆச­னங்­க­ளை­யும் பெற்­றுள்­ளன.

இந்த 32 சபை­க­ளி­லும் கட்­சி­கள் கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்­றுக் கொண்­டி­ருந்­தா­லும் ஆட்சி அமைப்­ப­தற்­கு­ரிய தனிப் பெரும்­பான்­மை­யைப் பெற்­றுக் கொள்­ள­வில்லை.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும், அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யும் ஒன்­றை­யொன்று ஆத­ரித்து செயற்­ப­டாத வரை­யில் ஆட்சி அமைப்­ப­தற்­கான வாய்ப்­புக்­கள் குறை­வா­கவே உள்­ளன. பெரும்­பான்­மை­யான ஆச­னங்­கள் முன்­ன­ணிக் கட்­சி­க­ளை­விட ஏனைய கட்­சி­க­ளுக்­கும் பெரு­ம­ளவு சென்­றுள்­ளன.

பெரும்­பான்மை ஆச­னங்­க­ளைப் பெற்ற கட்­சி­கள் தனித்து ஆட்சி அமைக்க முற்­பட்­டால், அந்த ஆட்சி சிறு­பான்மை ஆட்­சி­யா­கவே அமை­யும். திட்­டங்­க­ளைச் செயற்­ப­டுத்­து­தல் தொடக்­கம் சபையை நடத்­து­தல் வரை­யில் எத­னை­யும் செய்ய முடி­யாத நிலமை ஏற்­ப­டும். நிர்­வாக முடக்­கம் – பணி­க­ளில் தேக்க நிலை ஏற்­ப­டும்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­கள் திறம்­பட இயங்­கு­வ­தற்கு இரண்டு கட்­சி­க­ளும் இணைய வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது. சேர்ந்து இயங்­க­வேண்­டி­யது தவிர்க்க முடி­யா­த­தா­கி­யுள்­ளது. அவ்­வாறு இயங்­கா­விட்­டால், உள்­ளூ­ராட்சி சபை­க­ளின் வரவு – செல­வுத் திட்­டத்தை நிறை­வேற்ற முடி­யாத சூழல் ஏற்­ப­டும்.

மூன்று தட­வை­கள் வரவு – செல­வுத் திட்­டம் தோற்­க­டிக்­கப்­பட்­டால் சபை­யின் தலை­வரை மாற்­ற­வேண்­டிய நிலமை ஏற்­ப­டும். பைகள் திறம்­ப­டச் செயற்­பட முடி­யாத நிலமை ஏற்­ப­டும் என்­ப­து­டன் சபை­கள் கலைக்­கப்­பட வேண்­டிய சூழ­லும் ஏற்­ப­ட­லாம்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv