“எதற்கும் அஞ்சவேண்டாம். போர்க்குற்ற விசாரணைக்கு முகங்கொடுக்கவேண்டிவரின் உங்களுடன் நான் இருப்பேன்.”
– இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு ஆறுதல் கூறியுள்ளார் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ.
பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராக செயற்பட்ட ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேஸில் நீதிமன்றில் போர்க்குற்ற விசாரணை வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜகத் ஜயசூரியவுக்குச் சார்பாக பலரும் ஆதரவுக்குரல் எழுப்பிவருகின்றனர். அவர் மீது கைவைக்க இடமளிக்கமாட்டார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே ஜகத் ஜயசூரியவை தொலைபேசிமூலம் தொடர்புகொண்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ,
“சர்வதேச மட்டத்தில் விசாரணை நடத்தவேண்டிய நிலை ஏற்படுமானால் இறுதிப்போரின்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை வகித்தவன் என்ற வகையில் உங்களுக்கு சார்பாகச் செயற்படுவேன். அத்துடன், சர்வதேச சட்டதிட்டங்கள் தொடர்பிலும் ஆலோசனைகள் வழங்கப்படும்” என்று கூறினார்.