Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மட்டக்களப்பில் பதற்றத்தை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரிகளின் மரணம்!

மட்டக்களப்பில் பதற்றத்தை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரிகளின் மரணம்!

மட்டக்களப்பு- வவுணதீவில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வவுணதீவு வீதித்தடையில் காவலில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸார் மீது இனந் தெரியாதோரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.

வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் . பிரசன்னா ஆகிய பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv