விண்ணில் இருந்தே விண்வெளிக்கு ஏவப்படும் ராக்கெட் தயாரிக்க சீனா திட்டம்
விண்வெளிக்கு பூமியில் இருந்து தான் ராக்கெட் செலுத்தப்படும். ஆனால் விமானத்தில் ராக்கெட்டை எடுத்து சென்று விண்ணில் இருந்தே விண்வெளிக்கு அதை ஏவ சீனா திட்டமிட்டுள்ளது.
சீனா விண்வெளி துறையில் மகத்தான சாதனை படைத்து வருகிறது. இருந்தாலும் மேலும் சாதனை படைக்க அந்நாட்டு அதிபர் ஸி ஷின்பிங் விரும்புகிறார்.
அதற்காக ஊக்கம் அளித்து வருகிறார். அமெரிக்கா மற்றும் ரஷியாவை பின்னுக்கு தள்ளி விண்வெளி சாதனையில் முதலிடம் பிடிக்க திட்ட மிட்டுள்ளார்.
பொதுவாக விண்வெளிக்கு பூமியில் இருந்து தான் ராக்கெட் செலுத்தப்படும். ஆனால் விமானத்தில் ராக்கெட்டை எடுத்து சென்று விண்ணில் இருந்தே விண்வெளிக்கு அதை ஏவ சீனா திட்டமிட்டுள்ளது.
அத்தகைய ராக்கெட் அங்கு விரைவில் தயாராக உள்ளது. இத்தகவலை சீன ராக்கெட் தயாரிப்பு நிறுவன தலைவர் லீ தோங்யூ தெரிவித்துள்ளார்.
‘ஒய்-20’ என்ற போக்கு வரத்து விமானங்கள் ராக்கெட்டை தூக்கி சென்று நடுவானில் வைத்து விண்ணில் ஏவப்பட உள்ளது. அதற்கான வடிவம் மற்றும் தொழில் நுட்பத்தில் ராக்கெட் தயாரிக்கப்பட உள்ளது.
மேலும் வருகிற ஏப்ரலில் இருந்து சரக்கு ராக்கெட்டை சீனா விண்ணில் செலுத்துகிறது. அதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டில் விண்வெளி நிலையத்துக்கு ஆட்களை அனுப்பவும் திட்டமிட்டுள்ளது.




