சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக இவ்வருடம் 8,500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.
இதற்கிணங்க சிறுவர்களின் கட்டாய கல்வியை தடுத்தல் தொடர்பாக 1298 முறைப்பாடுகளும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் தொடர்பாக 481 முறைப்பாடுகளும், தீவிர பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 284 முறைப்பாடுகளும், 14 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகள் மீதான வன்புணர்வு தொடர்பாக 322 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தை மற்றும் இளைஞர் கட்டளை சட்டத்தின் கீழ் சிறுவர் புறக்கணிப்பு தொடர்பான முறைப்பாடுகள் 358 கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக ஆகக்கூடிய முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் படி கொழும்பில் 1232 முறைப்பாடுகளும், கம்பஹா மாவட்டத்தில் 925 முறைப்பாடுகளும், களுத்துறை மாவட்டத்தில் 550 முறைப்பாடுகளும், காலி மாவட்டத்தில் 647 முறைப்பாடுகளும், குருணாகல் மாவட்டத்தில் 654 முறைப்பாடுகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 490 முறைப்பாடுகளும், யாழ்ப்பாணத்தில் 925 முறைப்பாடுகளும், வவுனியா மாவட்டத்தில் 122 முறைப்பாடுகளும், மட்டக்களப்பில் 170 முறைப்பாடுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 125 முறைப்பாடுகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 117 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் பெறப்பட்டு அவை தொடர்பான தகவல்கள் விசேடமாக பேணப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்றதன் பின்னர் சட்ட அமுலாக்கல் பிரிவு, அவை தொடர்பான கட்சிகள் மற்றும் தொழிலாளர் திணைக்களம் குறிப்பாக பொலிஸ், கல்வி திணைக்களம் ஆகியவற்றுக்கும் அறிவிக்கப்படவுள்ளன.
தற்போது சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக செய்யப்படும் முறைப்பாடுகள் அவை சட்ட அமுலாக்கல் பிரிவினால் மேற்பார்வை செய்யப்ப ட்டு உடனுக்குடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைத் தலை வர் தெரிவித்துள்ளார். மேலும் இவை தொடர்பான துரித விசாரணைகளை வலுப்படுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் விசேட பொலிஸ் பிரிவு, சட்ட அமுலாக்கல் பிரிவு மற்றும் உளவியல் பிரிவு என்பனவும் அமைக்கப்பட்டு ள்ளன. இதன்மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான உடனடி தீர்வொன்றை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக் கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவோருக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுப்பதோடு, பாதிக்கப்பட்ட சிறுவர்களை மீண் டும் இலகுவாக சமூகத்திற்கு முகம் கொடுக்கச் செய்வதற்கு பொதுமக்களின் ஆதரவும் முக்கியமானதாகும். எனவே மக்கள் இதற்கு உதவ முன்வர வேண்டும் என அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் வன்முறை தொடர்பான எந்த விதமான முறைப்பாடுகளையும் 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் உடனுக்குடன் தெரிவிக்க முடியும். 24 மணி த்தியாலங்களும் இத்தொலைபேசி சேவை பாவ னையிலிருக்கும் என்பது குறிப் பிடத்தக்கதாகும்.