Tuesday , June 3 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்

சிறு­வர் துஷ்­பி­ர­யோ­கம் தொடர்பாக இவ்வருடம் 8,500 முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை அறி­வித்­துள்­ளது.

இதற்கிணங்க சிறு­வர்­களின் கட்­டாய கல்­வியை தடுத்தல் தொடர்­பாக 1298 முறைப்­பா­டு­களும் பாலியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்­பாக 481 முறைப்­பா­டு­களும், தீவிர பாலியல் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பாக 284 முறைப்­பா­டு­களும், 14 வய­துக்­குட்­பட்ட பெண் பிள்­ளைகள் மீதான வன்­பு­ணர்வு தொடர்­பாக 322 முறைப்­பா­டு­களும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. குழந்தை மற்றும் இளைஞர் கட்­டளை சட்­டத்தின் கீழ் சிறுவர் புறக்­க­ணிப்பு தொடர்­பான முறைப்­பா­டுகள் 358 கிடைக்கப் பெற்­றுள்­ள­தா­கவும் சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை குறிப்­பிட்­டுள்­ளது.

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பாக ஆகக்கூடிய முறைப்­பா­டுகள் கொழும்பு மாவட்­டத்­தி­லேயே பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. அதன் படி கொழும்பில் 1232 முறைப்­பா­டு­களும், கம்­பஹா மாவட்­டத்தில் 925 முறைப்­பா­டு­களும், களுத்­துறை மாவட்­டத்தில் 550 முறைப்­பா­டு­களும், காலி மாவட்­டத்தில் 647 முறைப்­பா­டு­களும், குரு­ணாகல் மாவட்­டத்தில் 654 முறைப்­பா­டு­களும், இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் 490 முறைப்­பா­டு­களும், யாழ்ப்­பா­ணத்தில் 925 முறைப்­பா­டு­களும், வவு­னியா மாவட்­டத்தில் 122 முறைப்­பா­டு­களும், மட்­டக்­க­ளப்பில் 170 முறைப்­பா­டு­களும், முல்லைத்தீவு மாவட்­டத்தில் 125 முறைப்­பா­டு­களும், கிளி­நொச்சி மாவட்­டத்தில் 117 முறைப்­பா­டு­களும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பான முறைப்­பா­டுகள் பெறப்­பட்டு அவை தொடர்­பான தக­வல்கள் விசே­ட­மாக பேணப்­பட்டு விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. சிறுவர் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பான முறைப்­பா­டுகள் தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபைக்கு கிடைக்­கப்­பெற்­றதன் பின்னர் சட்ட அமு­லாக்கல் பிரிவு, அவை தொடர்­பான கட்­சிகள் மற்றும் தொழி­லாளர் திணைக்­களம் குறிப்­பாக பொலிஸ், கல்வி திணைக்­களம் ஆகி­ய­வற்­றுக்கும் அறி­விக்­கப்­ப­டவுள்­ளன.

தற்­போது சிறுவர் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பாக செய்­யப்­படும் முறைப்­பா­டுகள் அவை சட்ட அமு­லாக்கல் பிரி­வினால் மேற்பார்வை செய்­யப்­ப ட்டு உட­னுக்­குடன் விசா­ர­ணைகள் மேற்­கொள்ளப்­பட்டு வரு­வ­தாக தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபைத் தலை வர் தெரி­வித்­துள்ளார். மேலும் இவை தொடர்­பான துரித விசா­ர­ணைகளை வலுப்­ப­டுத்த தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யினால் விசேட பொலிஸ் பிரிவு, சட்ட அமுலாக்கல் பிரிவு மற்றும் உள­வியல் பிரிவு என்­ப­னவும் அமைக்­கப்­பட்டு ள்­ளன. இதன்மூலம் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­களுக்­கான உட­னடி தீர­்­வொன்றை பெற்றுக்கொள்ளக் கூடி­ய­தாக இருக் கும் எனவும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

சிறு­வர்­களை துஷ்­பி­ர­யோ­கத்துக்கு உட்­ப­டுத்­து­வோ­ருக்கு உரிய தண்­டனை பெற்றுக்கொடுப்­ப­தோடு, பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­களை மீண் டும் இல­கு­வாக சமூ­கத்­திற்கு முகம் கொடுக்கச் செய்­வ­தற்கு பொதுமக்­களின் ஆத­ரவும் முக்­கி­ய­மா­ன­தாகும். எனவே மக்கள் இதற்கு உதவ முன்­வர வேண்டும் என அவர் பொதுமக்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் மற்றும் சிறுவர் வன்­முறை தொடர்­பான எந்­த­ வி­த­மான முறைப்­பா­டு­க­ளையும் 1929 என்ற அவ­சர தொலை­பேசி இலக்­கத்­திற்கு அழைப்­பினை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் உடனுக்குடன் தெரிவிக்க முடியும். 24 மணி த்தியாலங்களும் இத்தொலைபேசி சேவை பாவ னையிலிருக்கும் என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv