Saturday , June 28 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஈழத்து போட்டியாளர்களை குறி வைக்கும் இயக்குனர் சேரன்!

ஈழத்து போட்டியாளர்களை குறி வைக்கும் இயக்குனர் சேரன்!

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி ஒரு வாரம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று நிகழ்ந்த எலிமினேஷனில் இலங்கையை சேர்ந்த இருவர் குறித்து சேரன் பல தகவல்களை தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சென்ற வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் சண்டை – மோதல் என இருந்தாலும், இவர்கள் எந்த விஷயத்திலும் தலையிடவில்லை.

லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இயக்குனர் சேரனை அப்பா என்று தான் அழைத்தார். ஆனால் இன்று நடந்த முதல் எலிமினேஷனுக்கான நாமினேஷனில் சேரன் பேசும்போது முதலில் லாஸ்லியாவின் பெயரை தான் குறிப்பிட்டுள்ளார்.

“தர்ஷன் மற்றும் லாஸ்லியா இருவரும், அழகான குழந்தைகளாக எந்த அப்பழுக்கும் இல்லாமல், போலி தோற்றம் இல்லாமல் இருக்கிறார்கள். இந்த முகங்களுக்கு நடுவில் அவர்கள் இருக்க வேண்டாம். அதனால் அவர்கள் இந்த வீட்டில் வேண்டாம் என நினைக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv