Sunday , June 22 2025
Home / முக்கிய செய்திகள் / நம்பிக்கையில்லா பிரேரணை ஒருபோதும் வெற்றியளிக்காது – சந்திரிகா

நம்பிக்கையில்லா பிரேரணை ஒருபோதும் வெற்றியளிக்காது – சந்திரிகா

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெறாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நல்லாட்சி அரசின் ஐந்து வருட காலங்கள் பூர்த்தியடையும் வரை எவராலும் ஆட்சியை கலைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, 55 உறுப்பினர்களின் கையெழுத்துக்களுடன் கடந்த வாரம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியுள்ள நிலையில், அவர்களுடைய பதவிகள் பறிக்கப்படப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வலுவிழக்கச் செய்யும் வகையில், அவருக்கு ஆதரவாக சுமார் 80இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் கையெழுத்துக்களுடன் நாடாளுமன்ற சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் ஆதரவு பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv