நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக நிதியமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகிய ஒன்பது அமைச்சுக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, இராஜாங்க அமைச்சுப் பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமைச்சுப் பதவியில் இருந்த மஹிந்த அமரவீரவுக்கு, மேலதிகமாக இராஜாங்க அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றவர்கள் சற்றுமுன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
புதிய அமைச்சுப் பொறுப்புக்களின் விபரம்
♦ நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – மங்கள சமரவீர
♦ வெளிவிவகார அமைச்சர் – ரவி கருணாநாயக்க
♦ பெற்றோலிய வளத்துறை அமைச்சர் – அர்ஜூன ரணதுங்க
♦ துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சர் – மஹிந்த சமரசிங்க
♦ சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமை அமைச்சர் – எஸ்.பி.திஸாநாயக்க
♦ காணி மற்றும் நாடாளுமன்ற சீர்திருத்த அமைச்சர் – கயந்த கருணாதிலக்க
♦ தொழில், தொழிற்சங்கம் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சர் – டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன
♦ திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் – சந்திம வீரக்கொடி
♦ அபிவிருத்தி செயற்றிட்ட அமைச்சர் – திலக் மாரப்பண
♦ மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – மஹிந்த அமரவீர