வங்காளதேசத்தில் 560 மசூதிகளை கட்டும் சவுதி அரேபியா இதற்காக ரூ.6 ஆயிரம் கோடி செலவிடுவதாக வங்க தேச திட்ட மந்திரி முஸ்தபா கமால் தெரிவித்துள்ளார்.
வங்காள தேச அதிபர் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் செய்தார்.
அப்போது சவுதி அரேபிய மன்னரை சந்தித்த அவர், வங்காள தேசத்தில் பல்வேறு இடங்களில் மசூதி கட்டுவதற்கு சவுதி அரேபியா உதவ வேண்டும் என்று கேட்டு கொண்டார். அதை ஏற்றுக் கொண்ட மன்னர் மசூதி கட்டுவதற்கு உதவ முன்வந்துள்ளார்.
அதன்படி 6 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு பண உதவியை சவுதி அரேபியா செய்ய உள்ளது. இந்த பணத்தை கொண்டு 560 மசூதிகள் கட்டப்பட உள்ளன.
நாட்டில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் இந்த பணம் மூலம் மசூதி கட்டப்பட இருக்கிறது. இந்த தகவலை வங்க தேச திட்ட மந்திரி முஸ்தபா கமால் தெரிவித்துள்ளார்.