ஸ்ரீலங்கா அரசாங்கத்தை காப்பாற்றவே கால அவகாசம் – கஜேந்திரகுமார் சுமந்திரன் போன்றவர்கள் ஸ்ரீலங்காவிற்கு கால அவகாசத்தை வழங்க வேண்டும் எனக் கோருவது அரசாங்கத்தைக் காப்பாற்றும் நோக்கமே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களுக்கு நீதி கோருகின்ற நோக்கத்தோடு, முன்வைக்கின்ற கருத்தாக இருக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 7 ஆவது …
Read More »தமிழர்களின் பண்பாடும் பொருளாதாரமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன – பத்மினி சிதம்பரநாதன்
தமிழர்களின் பண்பாடும் பொருளாதாரமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன – பத்மினி சிதம்பரநாதன் தமிழ் மக்களின் பண்பாடு, கலாசாரம், பொருளாதாரம் என்பன திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். முன்னைய தலைவர்கள் இலட்சியத்துடனும் நேர்மையுடனும் மக்களை வழிநடத்தியதாகவும், மக்களும் அவர்களுடன் கைகோர்த்திருந்ததாகவும் பத்மினி சிதம்பரநாதன் மேலும் …
Read More »இந்தோனேசியாவுக்கு பறந்த மைத்திரி
இந்தோனேசியாவுக்கு பறந்த மைத்திரி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் ஆரம்பமாகியுள்ள இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரி இன்று (திங்கட்கிழமை) காலை 7.30 மணியளவில் அந்நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அரச தலைவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் இம் மாநாட்டில், ஜனாதிபதி மைத்திரி நாளைய தினம் பங்கேற்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். அத்தோடு, இந்தோனேசிய ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளார். இதேவேளை, …
Read More »காணாமல் போனோரின் உறவுகள் வவுனியாவில் இன்றும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்
காணாமல் போனோரின் உறவுகள் வவுனியாவில் இன்றும் உணவுத்தவிர்ப்பு போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் முன்னெடுத்துள்ள சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் 11 ஆவது நாளாக இன்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு முன்னரும் கடத்தப்பட்டும், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா வீதி …
Read More »மஹிந்தவுடன் முஸ்லிம் பிரதிநிதிகள் மந்திர ஆலோசனை
மஹிந்தவுடன் முஸ்லிம் பிரதிநிதிகள் மந்திர ஆலோசனை கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இடையிலான இந்த பேச்சுவார்த்தையின்போது, எதிர்கால அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. அதன்படி …
Read More »பிள்ளையானுக்கு தொடர்ந்தும் சிறை
பிள்ளையானுக்கு தொடர்ந்தும் சிறை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 20ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்கின் சந்தேகநபர்களான பிள்ளையான், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் …
Read More »வடக்கில் இராணுவத்தை அதிகரியுங்கள் – கருணா
வடக்கில் இராணுவத்தை அதிகரியுங்கள் – கருணா வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றுமாறு தமிழ் தரப்பினர் தொடர்ந்தும் கோரி வருகின்ற நிலையில், இரு மாகாணங்களிலும் ராணுவத்தின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்குமாறு முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு கிழக்கில் வாழும் சுமார் 14 ஆயிரம் முன்னாள் போராளிகளையும் கண்காணிப்பதற்கு இராணுவத்தினரையும் புலனாய்வு அதிகாரிகளையும் அரசாங்கம் மேலதிகமாக …
Read More »கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழாவிற்கான ஏற்பாடுகள் நிறைவு
கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழாவிற்கான ஏற்பாடுகள் நிறைவு கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழாவிற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழாவிற்கான ஏற்பாட்டு கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து பக்தர்கள் வருகைதரவுள்ள நிலையில், மலசல கூடங்கள் மற்றும் தங்குமிட தற்காலிக கொட்டகைகள், போக்குவரத்துக்கள், படகுச் சேவைகள் குறித்தும் துறைசார்ந்த …
Read More »இலங்கையில் கலப்பு நீதிமன்றத்தை செயற்படுத்த அரசியலமைப்பு அனுமதிக்காது: பிரதமர் ரணில்
இலங்கையில் கலப்பு நீதிமன்றத்தை செயற்படுத்த அரசியலமைப்பு அனுமதிக்காது: பிரதமர் ரணில் இலங்கை போன்ற சுதந்திரமான நீதித் துறை உள்ள நாட்டில் கலப்பு நீதிமன்றம் சாத்தியமற்றது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சட்டத்தரணிகள் சங்கத்தினால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றி பிரதமர், இலங்கையின் நீதித்துறை செயற்பாடுகளில் கலப்பு நீதிப் பொறிமுறையை உள்வாங்க வேண்டுமாயின் அரசியலமைப்பு மாற்றத்தின் மூலமே சாத்தியமாகும். …
Read More »இலங்கையின் செயற்பாடுகள் மகிழச்சியளிக்கும் வகையில் இல்லை: ஐ.நா. குற்றச்சாட்டு
இலங்கையின் செயற்பாடுகள் மகிழச்சியளிக்கும் வகையில் இல்லை: ஐ.நா. குற்றச்சாட்டு இலங்கையில் நிலைமாறுகால பொறிமுறை தொடர்பான செயற்பாடுகளின் வேகம் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமையவில்லை எனச் சுட்டிக் காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன், தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான அடிப்படை விடயங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார். ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற …
Read More »