முன்னாள் அமைச்சர் ரேணுகா ஹேரத் காலமானார் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவியுமான ரேணுகா ஹேரத் தமது 72ஆவது வயதில் காலமானார். சுகயீனம் காரணமாக கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று (திங்கட்கிழமை) காலை காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை வலப்பனையில் நடைபெறவுள்ளது. கடந்த 1977ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் …
Read More »தமிழ் அரசியல்வாதிகள் நல்லாட்சிக்கு வலுசேர்க்கின்றனர்
தமிழ் அரசியல்வாதிகள் நல்லாட்சிக்கு வலுசேர்க்கின்றனர் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்ட தமது உறவுகளை கடந்த எட்டு வருட காலமாக கையளிக்க முடியாத இந்த அரசாங்கம், இன்னும் இரண்டு வருட காலத்தில் எதனை சாதிக்கப்போகின்றது என்ற நம்பிக்கையில் கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ் தலைமைகள் உடன்பட்டுள்ளனர் என்ற விடயம் தெரியவில்லையென காணாமல் போனோரின் உறவுகள் அங்காலாய்க்கின்றனர். காணாமல் போன தமது உறவுகளை கையளிக்குமாறு கோரி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், …
Read More »சமூகத்தில் புறக்கணிக்கப்படும் முன்னாள் பெண் போராளிகள்
சமூகத்தில் புறக்கணிக்கப்படும் முன்னாள் பெண் போராளிகள் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண்கள் போராளிகள் இன்று சமுகத்தினால் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். யுத்ததிற்கு முன்னர் பெண் போராளிகளுக்கு காணப்பட்ட மரியாதை யுத்ததின் பின்னர் மழுங்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு ஏறாவூரில் நேற்றைய தினம் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு விடியலை நோக்கிய …
Read More »வடக்கு மாகாணத்தில் 549 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது
வடக்கு மாகாணத்தில் 549 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது வடக்கு மாகாணத்தில் பட்டதாரிகள் 549 பேருக்கும், 480 ஆசிரியர் கலாசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆசிரியர் சேவையில் பட்டதாரிகளையும், ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களையும் வடமாகாண ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பு செய்வதற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று காலை யாழ். இந்து மகளீர் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது 549 பட்டதாரிகளுக்கும் 480 ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களுக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. …
Read More »சொகுசு கார்களில் பயணிக்கும் அரசியல்வாதிகளுக்கு மக்களின் நிலை தெரிவதில்லை: பன்னங்கண்டி மக்கள்
சொகுசு கார்களில் பயணிக்கும் அரசியல்வாதிகளுக்கு மக்களின் நிலை தெரிவதில்லை: பன்னங்கண்டி மக்கள் மழைக்கும் வெயிலுக்கும் ஈடுகொடுக்க முடியாத தகரக் கொட்டில்களில் வாழும் தமது நிலை, அரசியல்வாதிகளுக்கு தெரிவதில்லையென கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் தெரிவித்துள்ளனர். காணி உறுதியற்ற நிலையில் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் இப்பிரதேசத்தில் எவ்வித வசதிகளும் இன்றி வாழ்ந்துவரும் பன்னங்கண்டி மக்கள், கடந்த 10 நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாயொருவரே இவ்வாறு …
Read More »ஸ்ரீலங்கா படைகள் தொடர்ந்தும் கேட்பாரின்றி செயற்படுகின்றன : யஸ்மின் சூகா
ஸ்ரீலங்கா படைகள் தொடர்ந்தும் கேட்பாரின்றி செயற்படுகின்றன : யஸ்மின் சூகா ஸ்ரீலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளை கடந்த போதிலும், ஸ்ரீ லங்கா படையினர் கேட்பாரின்றி தொடர்ந்து செயற்படுவதாக, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார். அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். போர் நடந்த பகுதிகளில் தமிழ் மக்கள் இராணுவ மயப்படுத்தப்பட்ட, கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தலுக்குட்பட்ட …
Read More »சாவகச்சேரியில் 231 கிலோ கேரளா கஞ்சா மீட்பு
சாவகச்சேரியில் 231 கிலோ கேரளா கஞ்சா மீட்பு யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் 231 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி மீசாலை மேற்கு வயல் பகுதி ஒன்றிலிருந்து குறித்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதியின் பெறுமதி இரண்டு கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து 7.30 மணியளவில் குறித்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை …
Read More »வட.கிழக்கு பட்டதாரிகளின் போராட்டம் முடிவின்றி தொடர்கிறது
வட.கிழக்கு பட்டதாரிகளின் போராட்டம் முடிவின்றி தொடர்கிறது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து தம்மை கல்வி கற்க வைத்த பெற்றோர் இன்று தாம் வேலைவாய்ப்பு இல்லாமல் நடு வீதிகளில் நின்று போராடுவதை எண்ணி வேதனை அடைவதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கல்விகற்ற தாம் இன்று தொழில்வாய்ப்பை பெறமுடியாமல் பலரின் ஏழனத்திற்கு உள்ளவாது வேதனையளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பினை வழங்குமாறு கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் …
Read More »வாழைச்சேனை வைத்தியசாலை சுற்றி மதில் அமைக்க 10 மில்லியன் ஒதுக்கீடு: கிழக்கு முதலமைச்சர்
வாழைச்சேனை வைத்தியசாலை சுற்றி மதில் அமைக்க 10 மில்லியன் ஒதுக்கீடு: கிழக்கு முதலமைச்சர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவிலுள்ள வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு சுற்றுமதில் அமைக்க 10 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்படி அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியைக் கொண்டு சுமார் 3500 அடி சுற்றுப்பரப்புக்கு சுற்று மதில் அமைக்கப்படவுள்ளது. …
Read More »அர்ஜுன மகேந்திரனிடம் விசாரணை
அர்ஜுன மகேந்திரனிடம் விசாரணை இலங்கை மத்திய வங்கியில் பிணை, முறிகள் விநியோகத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழு வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனிடம்இன்றைய தினம் விசாரணை நடத்தியுள்ளது. இந்த மோசடி சர்ச்சை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்கு இன்றைய தினம் சமூகமளிக்குமாறு கடந்த 8ஆம் திகதி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. கடந்த 2015ஆம் ஆண்டு ரணில் மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் …
Read More »