நாடாளுமன்ற உறுப்பினர்களில் 94 பேர் கபொத சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் நாடாளுமன்றத்தில், அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் 94 பேர் கபொத சாதாரண தரப் பரீட்சையில் கூட சித்தியடையாதவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எம்.ஒ.ஏ டி சொய்சா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 225 உறுப்பினர்களைக் கொண்ட சிறிலங்கா …
Read More »நிலைப்பாட்டைத் தெளிவாக உணராதவர்களே கூட்டமைப்பு மீது குற்றம்சுமத்துகின்றனர்
நிலைப்பாட்டைத் தெளிவாக உணராதவர்களே கூட்டமைப்பு மீது குற்றம்சுமத்துகின்றனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கால நீடிப்புக்கு உடன்பட்டுள்ளது என்ற விடயத்தில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மக்களுக்காக செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாட்டைத் தெளிவாக உணராதவர்களே கூட்டமைப்பு மீது குற்றம்சுமத்துகின்றனர் என்று சாடியுள்ளார். மட்டக்களப்பு – களுமுந்தன்வெளி வலம்புரி வாசகர் வட்டமும் மாதர் கிராம அபிவிருத்திச் …
Read More »மஹிந்தவின் நிலைப்பாட்டிலேயே மைத்திரி
மஹிந்தவின் நிலைப்பாட்டிலேயே மைத்திரி யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீலங்காவின் மனித உரிமை மீறல் தொடர்பில் இராணுவத்தைக் காட்டிக்கொடுக்க மாட்டோம் என்று மஹிந்த ராஜபக்ச கூறியிருந்த நிலையில், தற்போது இராணுவத்தை விசாரணை செய்ய விடமாட்டோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன …
Read More »இலங்கையிடம் கப்பம் கோரும் சோமாலிய கடற்கொள்ளையர்கள்
இலங்கையிடம் கப்பம் கோரும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை விடுப்பதாயின் அதற்காக கப்பம் கோரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை கொடியுடன் எரிபொருள் ஏற்றி வந்த கப்பல் நேற்றைய தினம் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்தது. துபாய் நிறுவனமொன்றில் பதிவு செய்யப்பட்ட எரிஸ் 13 எனும் மேற்படி கப்பலில் 8 ஸ்ரீலங்கா மாலுமிகள் கடமை புரிவதாக கடற்படை தெரிவித்திருந்தது. கப்பலை தேடும் ஐரோப்பிய சங்கத்தினர் கொள்ளையர்களை தொடர்பு கொண்ட போதே …
Read More »தமிழர்களின் நலனுக்காக உழைப்பதாக சிலர் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் : ஸ்ரீநேசன்
தமிழர்களின் நலனுக்காக உழைப்பதாக சிலர் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் : ஸ்ரீநேசன் ஜெனீவா தீர்மான விடயத்தில் தமிழர்களின் நலனுக்காக உழைப்பதாக சிலர் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவா தீர்மான அமுலாக்கத்திற்கு மேலதிக கால அவகாசம் கோரப்பட்டுள்ள நிலையில், கால அவகாசம் கேட்பதற்கும் கூட்டமைப்பிற்கும் சம்பந்தமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வாகனேரி கோகுலம் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் …
Read More »புலிகளின் செயற்பாடுகள் பயங்கரவாத நடவடிக்கையாக ஏற்க முடியாது : ஐரோப்பிய நீதிமன்றம்
புலிகளின் செயற்பாடுகள் பயங்கரவாத நடவடிக்கையாக ஏற்க முடியாது : ஐரோப்பிய நீதிமன்றம் புலிகள் அமைப்பினை பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலிலிருந்து நீக்க மறுக்கும் வகையிலான தீர்ப்பொன்றினை ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கியுள்ளது. சர்வதேச மனிதநேயச் சட்டத்தின் கீழ், போரில் ஈடுபடும் ஆயுதப் படைகளின் செயற்பாடுகள் பயங்கரவாத நடவடிக்கைகள் என்ற வகைக்குள் அடக்கப்படலாம் என்றும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 2006ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பினை தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களுக்கான …
Read More »மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் அவசியம் : ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து
மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் அவசியம் : ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி சலுகையான ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவது குறித்து சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காத்திரமான முன்னேற்றங்களை மேற்கொள்ளவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் ஸ்ரீலங்காவிடம் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைக்குழு ஒன்று நேற்றும், இன்றும் கொழும்பில் நடத்திய இணைக்குழுக் கூட்டத்தின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், ஸ்ரீலங்கா சித்திரவதை உள்ளிட்ட …
Read More »பன்னங்கண்டி மக்களுக்கு பொது அமைப்புக்கள் ஆதரவு
பன்னங்கண்டி மக்களுக்கு பொது அமைப்புக்கள் ஆதரவு நிரந்தர காணி உரிமையுடன் கூடிய நிரந்தர வீட்டுத்திட்டத்தை வழங்குமாறு வலியுறுத்தி, பன்னங்கண்டி மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் பொது அமைப்புக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் ஏ9 வீதியின் அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம், தீர்வை எட்டும் நோக்குடன் இன்று 10 ஆவது நாளாக இடம்பெற்றுவருகின்றது. நிரந்தர காணி உரிமையை வலியுறுத்தி மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு …
Read More »யாழில் பெண்ணொருவர் மீது கோடரி தாக்குதல்
யாழில் பெண்ணொருவர் மீது கோடரி தாக்குதல் யாழ்.திருநெல்வேலி – ஆடியபாதம் பகுதியில் பெண்ணொருவர் கோடரி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். ஆடியபாதம் பகுதியில் ஒப்பனை அலங்கார நிலையமொன்றை நடத்திவந்த குறித்த பெண்மீது சற்றுமுன் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அலங்கார நிலையத்திற்குள் புகுந்து இத் தாக்குதலை நடத்திய சந்தேகநபரை கைதுசெய்துள்ள யாழ். பொலிஸார், சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தனிப்பட்ட விரோதமே இத் தாக்குதல் சம்பவத்திற்கு காரணமென ஆரம்பகட்ட விசாரணைகள் …
Read More »மன்னார் பிரதான வீதியில் விபத்து: ஒருவர் படுகாயம்
மன்னார் பிரதான வீதியில் விபத்து: ஒருவர் படுகாயம் மன்னார் – தாழ்வுபாடு பிரதான வீதி எழுத்தூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) மன்னாரில் இருந்து எழுத்தூரை நோக்கி பயணித்த லொறியும், தாழ்வுபாடு பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதியே குறித்த விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார். விபத்து தொடர்பான …
Read More »